உள்ளூர் செய்திகள்
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலம்
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.
ஆட்டையாம்பட்டி:
காளிபட்டி கந்தசாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காவடிகள் ஆற்றுக்கு புறப்பாடு, தீர்த்தக் காவடிக்கு பூஜை, காவடிகள் கோயிலுக்கு வந்து அடைதல் நடைபெற்றது.
இன்று பங்கு உத்திரத்தை முன்னிட்டு காலை முதல் மாலை வரை தீர்த்த அபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடந்தன.
விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவில் அலங்காரத்துடன் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது.
பங்குனி உத்திர ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பூசாரி பி.எல். செல்வகுமார், செயல் அலுவலர் முருகன் ஆகியோர் செய்துள்ளனர்.