உள்ளூர் செய்திகள்
ஆம்பூரில் பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
ஆம்பூரில் பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
ஆம்பூர்:
ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியை சேர்ந்தவர் கமல் பாஷா இவரது மனைவி ஜியாத் (வயது 54). இவர்கள் இருவரும் கடந்த 7-ந் தேதி பைக்கில் ஆம்பூர் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த ஜியாத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பா¤தாபமாக உயிர் இழந்தார்.
இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.