உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

காதல் திருமணம் செய்த பெண் மாயம்

Published On 2022-03-08 08:52 GMT   |   Update On 2022-03-08 08:52 GMT
தேவதானப்பட்டியில் காதல் திருமணம் செய்த பெண் மாயமானார்
தேவதானப்பட்டி:

ஜெயமங்கலம் காந்திநகர் காலனியைச் சேர்ந்த பாண்டி மனைவி ஆதீரா (வயது 23). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பாண்டி லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஆதீரா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது மாமியார் தேன்மொழி ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News