உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கன்னியாகுமரி, ராஜாக்கமங்கலம் பகுதிகளில் மின்தடை

Published On 2022-03-04 10:13 GMT   |   Update On 2022-03-04 10:13 GMT
கன்னியாகுமரி, ராஜாக்கமங்கலம் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:

கன்னியாகுமரி மின் வினியோக பகுதிகளில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (5-ந் தேதி) கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, வழுக்கம்பாறை, கீழமணக்குடி, அழகப்பபுரம்,  சுசிந்திரம், கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சுகிராமம், கோழிக்கோட்டுப்பொத்தை, வாரியூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. 

இதே போல் ஆசாரிபள்ளம் மின் வினியோக பிரிவுக்கு உட்பட்ட தம்மத்துக்கோணம் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தம்மத்துக்கோணம், ராஜாக்கமங்கலம், ஞானம்நகர், எறும்புக்காடு, தாராவிளை, காரவிளை, பருத்திவிளை, அளத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வருகிற 7-ந் தேதி காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இந்த தகவலை நாகர்கோவில் மின் வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News