உள்ளூர் செய்திகள்
கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேவா சார்பில் சிவாலய ஓட்டம் நடைபெற்றது.
கும்பகோணம்:
மகா சிவராத்திரியை முன்னிட்டு ரஷ்யா உக்ரைன் போர் பதற்றம் குறைந்து அமைதி நிலவவும், ரஷ்ய தாக்குதலில் பலியானவர்களின் ஆன்மா சாந்தியடையவும், மகாசிவராத்திரி தினத்தில் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேவா சார்பில் சிவாலய ஓட்டம் நடைபெற்றது.
சிவாலய ஓட்டம் கும்பகோணம் கொட்டையூர் கோடீஸ்வரர் கோவிலில் தொடங்கப்பட்டது பாஜக மாவட்ட துணைத்தலைவர் சோழராஜன் சிவாலய
ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
மாநில பொதுச் செயலாளர் பாலா, மாணவரணி தலைவர் சத்தியமூர்த்தி, மாணவரணி நகர தலைவர் மதன், மாவட்ட பொதுச் செயலாளர் ஆனந்த், மற்றும் நிர்வாகிகள் சிவா, கார்த்தி, ஹரி, ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கொட்டையூர் கோடீஸ்வரர் கோவிலில் தொடங்கிய சிவாலய ஓட்டம், மேலக்காவேரி கைலாசநாதர் கோவில், மடத்துத்தெரு காளஹஸ்தீஸ்வரர் கோவில், பாணபுரீஸ்வரர் கோவில், கம்பட்ட விஸ்வநாதர் கோவில், ஆதிகும்பேஸ்வரர் கோவில், சோமேஸ்வரன் கோவில், நாகேஸ்வரன் கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், அபிமுகேஸ்வரர் கோவில், கவுதமேஸ்வரர் கோவில், இறுதியாக மகாமக மேல்கரையில் சிவாலய ஓட்டம் நிறைவு பெற்றது.
பாஜக மாவட்ட செயலாளர் பொன்ராஜ், ரஷ்யா&உக்ரைன் அமைதி நிலவ சிவாலய ஓட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.