உள்ளூர் செய்திகள்
டிடிவி தினகரன்

தமிழகம் முழுவதும் பணமழை ஆறாக ஓடுகிறது- டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

Published On 2022-02-18 08:21 GMT   |   Update On 2022-02-18 08:21 GMT
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பிரசாரம் ஓய்ந்தவுடன் தமிழகம் முழுவதும் பணமழை ஆறாக ஓடுகிறது என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறி உள்ளார்.
சென்னை:

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பிரசாரம் ஓய்ந்தவுடன் நேற்று மாலையில் இருந்து தமிழகம் முழுவதும் பணமழை ஆறாக ஓடுவதாக தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில், ஜனநாயகத்தை கேலிக் கூத்து ஆக்கும் வகையில் தி.மு.க. மற்றும் பழனிசாமி கம்பெனிகள் பணத்தை வாரி இறைப்பதை மாநில தேர்தல் ஆணையமும், காவல் துறையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பது கண்டனத்திற்குரியது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News