உள்ளூர் செய்திகள்
உசிலம்பட்டியில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19&ந்தேதி நடக்கிறது. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் உசிலம்பட்டியில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.
அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து இந்த ஊர்வலம் தொடங்கியது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் உசிலம்பட்டி டி.எஸ்.பி. நல்லு, ஆய்வாளர் விஜய்பாஸ்கர், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆறுமுகம், மற்றும் சார்பு ஆய்வாளர்கள், போலீசார் கலந்துகொண்டனர்.
இந்த ஊர்வலம் பேரையூர் சாலையில் முடிவடைந்தது.