உள்ளூர் செய்திகள்
கயத்தாறு புனிதலூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கயத்தாறு:
கயத்தாறு புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி ஆராதனை, நற்கருணை சொற்பொழிவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழாவில் இறைமக்கள் மற்றும் பங்குத் தந்தைகள் துரைராஜ், வின்சென்ட், அலாய்சியஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து தினமும் காலை மாலை தேர் பவனி நடைபெறுகிறது.
10-ம் திருவிழா அன்று சப்பர பவனி நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை இறைய மக்கள் செய்து வருகின்றனர்.