உள்ளூர் செய்திகள்
திருவனந்தபுரம்-திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இன்று ரத்து
திருவனந்தபுரம்- திருச்சி இன்டர்சிட்டி ரெயில் ரத்து செய்யப்பட்டதால் நெல்லையில் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் வழியாக தினமும் ஏராளமான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. தினமும் திருச்சியில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் நெல்லைக்கு 12.25- க்கு வந்து சேரும். பின்னர் இங்கிருந்து திருவனந்தபுரத்திற்கு புறப்படும்.
மறுமார்க்கமாக திருவனந்தபுரத்தில் இருந்து 22628 என்ற எண் கொண்ட இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 11.35 -க்கு புறப்பட்டு குழித்துறை, நாகர்கோவில், வள்ளியூர் வழியாக நெல்லைக்கு மதியம் 2.25 மணிக்கு வந்து சேரும். அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு திருச்சிக்கு சென்றடையும். இந்த ரெயிலுக்கான இணைப்பு பெட்டிகள் குருவாயூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வரும் ரெயிலில் உள்ள பெட்டிகளை கொண்டதாகும்.
இந்தநிலையில் நேற்று நள்ளிரவு குருவாயூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரெயில் பாதையில் ஆலுவா பகுதியில் சரக்கு ரெயில் ஒன்று தடம் புரண்டது. இதனால் இன்று குருவாயூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரெயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டதால் திருவனந்தபுரம் வந்து சேரவில்லை.
இதனால் திருவனந்தபுரம்-திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரசுக்கான இணைப்பு பெட்டிகள் இல்லாத காரணத்தினால் இன்று அந்த ரெயில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம்- திருச்சி இன்டர்சிட்டி ரெயில் ரத்து செய்யப்பட்டதால் நெல்லையில் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் வழியாக தினமும் ஏராளமான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. தினமும் திருச்சியில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் நெல்லைக்கு 12.25- க்கு வந்து சேரும். பின்னர் இங்கிருந்து திருவனந்தபுரத்திற்கு புறப்படும்.
மறுமார்க்கமாக திருவனந்தபுரத்தில் இருந்து 22628 என்ற எண் கொண்ட இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 11.35 -க்கு புறப்பட்டு குழித்துறை, நாகர்கோவில், வள்ளியூர் வழியாக நெல்லைக்கு மதியம் 2.25 மணிக்கு வந்து சேரும். அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு திருச்சிக்கு சென்றடையும். இந்த ரெயிலுக்கான இணைப்பு பெட்டிகள் குருவாயூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வரும் ரெயிலில் உள்ள பெட்டிகளை கொண்டதாகும்.
இந்தநிலையில் நேற்று நள்ளிரவு குருவாயூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரெயில் பாதையில் ஆலுவா பகுதியில் சரக்கு ரெயில் ஒன்று தடம் புரண்டது. இதனால் இன்று குருவாயூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரெயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டதால் திருவனந்தபுரம் வந்து சேரவில்லை.
இதனால் திருவனந்தபுரம்-திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரசுக்கான இணைப்பு பெட்டிகள் இல்லாத காரணத்தினால் இன்று அந்த ரெயில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம்- திருச்சி இன்டர்சிட்டி ரெயில் ரத்து செய்யப்பட்டதால் நெல்லையில் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.