உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

மினி வேன் திருடிய 2 வாலிபர்கள் கைது

Published On 2022-01-28 08:20 GMT   |   Update On 2022-01-28 08:20 GMT
கரூர் அருகே ஐந்து ரோடு பகுதியில் மினி வேன் திருடிய வழக்கில் இருவரை சின்னதாராபுரம் போலீசார் கைது செய்தனர்.
கரூர்:

கரூர் மாவட்டம் க.பரமத்தியை அடுத்த தும்பிவாடி அருகே ஐந்து ரோடு பகுதியில் வசிப்பவர் மலையப்பன் மகன் கனகராஜ் (வயது 45). இவர் மினி வேன் வைத்துள்ளார்.

கடந்த 22 ஆம் தேதி அன்று இரவு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இவரது மினி வேன் அதிகாலையில் மாயமாகி இருந்தது. யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் அங்கு வந்து வாகனத்தை திருடி சென்று விட்டனர்.

இது குறித்து அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் அவர் சின்னதாராபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருடு போன மினி வேனை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கரூரை அடுத்த பெரிய ஆண்டாங்கோவில் அருகேயுள்ள பெரியார் நகரை சேர்ந்த கோவிந்தன் மகன் செல்வம் (40), இவருடன் கரூர் அருகே செல்வநகரை சேர்ந்த மணி மகன் கணேசன் (24) ஆகியோர் மினி வேனை திருடியது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் வேனை திருடியதை இருவரும் ஒப்புக் கொண்டனர். இருவர் மீதும் சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
Tags:    

Similar News