உள்ளூர் செய்திகள்
மார்த்தாண்டம் அருகே பிளஸ் 1 பள்ளி மாணவி திடீரென மாயமானார்.
நாகர்கோவில்:
மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகள் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1- படித்து வருகிறார். சம்பவத்தன்று அருகாமையில் உள்ள தோழியின் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இது குறித்து மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.