உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கோவையில் மனைவி கோபித்து சென்றதால் வாலிபர் தற்கொலை

Published On 2022-01-26 09:30 GMT   |   Update On 2022-01-26 09:30 GMT
வேறோரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக மனைவி சந்தேகப்பட்டார்

கோவை:

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தென்னமநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 35). கூலிதொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி(30).  இந்த நிலையில் ராமசாமிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்து வந்ததாக கடந்த சில நாட்களாக அவரது மனைவி தனலட்சுமிக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

இதனால் கணவன்& மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று  மீண்டும் ராமசாமிக்கும், அவரது மனைவி தனலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தனலட்சுமி கோபித்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் ராமசாமி மனவேதனையுடன் இருந்து வந்தார். மறுநாள் காலை வீட்டை விட்டு வெகுநேரம் ராமசாமி வெளியில் வராமல் இருந்தார். 

இதையடுத்து அவரது வீட்டின் அருகே வசித்து வரும் பெண் ஒருவர் வீட்டின் உள்ளே பார்த்தார். அப்போது ராமசாமி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News