உள்ளூர் செய்திகள்
கலெக்டர் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்திய காட்சி.

கரூரில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

Published On 2022-01-26 06:25 GMT   |   Update On 2022-01-26 06:25 GMT
கரூரில் குடியரசு தினவிழாவையொட்டி கலெக்டர் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
கரூர்:

இந்தியத் திருநாட்டின் 73&-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு கரூர்  மாவட்ட விளையாட்டரங்கத்தில் இன்று  நடைபெற்ற  குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் டாக்டர். த.பிரபு சங்கர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து போலீசாரின்  அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
 
பின்னர் அனைவரிடமும் சமத்துவம் நிலவும் வகையில் சமாதானப் புறாக்களையும், தேசிய கொடி வண்ணத்திலான பலூன்களையும் பறக்கவிட்டார். அரசின் வழிகாட்டுநெறி முறைகளின்படி நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் முன்னிலை வகித்தார்.

அதனைத் தொடர்ந்து கலெக்டர் த.பிரபுசங்கர், கொரோனா கட்டுப்பாடு பணிகள், முன்கள பணிகள், அலுவலக பணிகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், மருத்துவர்கள், காவல் துறை அலுவலர்கள், வருவாய்த்துறை மற்றும் வளர்ச்சித்துறை அலுவலர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட  பல்வேறு  அரசு துறைகளை சார்ந்த நபர்களை பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா 8 பேருக்கும், சமூக பாதுகாப்புத் திட்ட உதவித் தொகை 10 பேருக்கும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் தேய்ப்புப் பெட்டி 5 பேருக்கும், தையல் எந்திரம் 5 பேருக்கும், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் எம்பிராய்டரி தையல் எந்திரம் 2 பேருக்கும், தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ரூ.12.68 லட்சம் மதிப்பிலான கடனுதவி 2 பேருக்கும், வேளாண்மைத் துறையின் மூலம் இடுபொருட்கள் 2 பேருக்கும், தோட்டக்கலைத் துறையின் மூலம் இடுபொருட்கள் 2 பேருக்கும், ஊரகவளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை மூலம் பிரதம மந்திரி குடியிருப்பு ஊரகத் திட்டத்தின் கீழ் வேலை உத்தரவு ஆணைகள் 19 பேருக்கும், கூட்டுறவுத்துறை மூலம் ஆதரவற்ற விதவைக ளுக்கான கடனுதவி 2 பேருக்  கும், சமூக நலன் மற்றும் மக ளிர் உரிமைத்துறை மூலம் மூன்றாம் பாலித்தனவருக்கான அடையாள அட்டை  2 பேருக்கு என மொத்தம் 62 பயனாளிகளுக்கு ரூ.48,57,970 மதிப் பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

மேலும், அரசுத்துறை அலுவலர்களுக்கு அரசின் வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி  ஓட்டப்பந்தயம், வினாடி&வினா போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு கலெக்டர் நினைவுப்பரிசுகளை வழங்கி பாராட்டினார். இன்றைய நிகழ்ச்சியில் பராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களைப் பெற்ற அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் பிளாஸ்டிக்கை ஒழிக்க உறுதியேற்கும் வகையில் மஞ்சப்பைகளையும், குடியரசு தினத்தின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்திய அரசமைப் பின் முகவுரையினையும் நினைவுப்பரிசாக கலெக்டர் வழங்கினார்.
 
விழாவில் மாவட்ட வருவாய்  அலுவலர் லியாகத், நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர்  கவிதா,  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் முத்துச்செல்வன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சைபுதீன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், நகராட்சி ஆணையர்கள் சுப்புராம் (குளித்தலை), கனிராஜ் (புகளுர்), கோபாலகிருஷ்ணன் (பள்ளப்பட்டி), குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா தேவி, மாவட்ட வழங் கல் அலுவலர் தட்சிணா மூர்த்தி, அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News