உள்ளூர் செய்திகள்
தண்டவாளத்தில் பிணமாக கிடந்த வாலிபர்.

கல்லிடைக்குறிச்சி அருகே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது

Published On 2022-01-24 10:51 GMT   |   Update On 2022-01-24 10:51 GMT
கல்லிடைக்குறிச்சி அருகே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது.
கல்லிடைக்குறிச்சி:

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் ஒரு வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று அடையாளம் தெரியாமல் இருந்தது. 

இதுகுறித்து தென்காசி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னார்கள். இதில் அவர் கல்லிடைக்குறிச்சி தெற்கு அத்தியடி தெருவை சேர்ந்த சிதம்பரசுப்ரமணியம் மகன் மாரியப்பன் (வயது24) என்பது தெரியவந்தது.

இவர் சென்னையில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்றுமுன்தினம் ஊருக்கு வந்த மாரியப்பன், தோல்நோய் காரணமாக மனமுடைந்து காணப்பட்டார். 

இந்த நிலையில் அவர் ரெயில்வே தண்ட வாளத்தில் பிணமாக கிடந்ததால், அவர் மனக்குழப்பம் காரணமாக ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

தொடர்ந்து தென்காசி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News