உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2022-01-23 06:36 GMT   |   Update On 2022-01-23 06:36 GMT
திருவாரூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்தார்.
திருவாரூர்:

திருவாரூர் அருகே உள்ள நடப்பூரைச் சேர்ந்தவர் மாதவன் (வயது 35) 
விவசாயி. இவரது மனைவி பாப்பம்மாள் (32). 

இந்நிலையில் மாதவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக 
கூறப்படுகிறது. இதனால் கணவன்&மனைவிக்குள் அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
 
சம்பவத்தன்றும் இவர்களுக்குள் குடும்ப பிரச்சினை ஏற்பட்டதால் மன உளைச்சல் அடைந்த மாதவன், வீட்டில் யாரும் இல்லாதபோது வயலுக்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு மயங்கி விழுந்துள்ளார். 

இதையடுத்து மாதவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாதவன் இறந்தார். 

இதுதொடர்பாக அவரது மனைவி பாப்பம்மாள், வைப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பரமானந்தம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News