உள்ளூர் செய்திகள்
கொள்ளை

விழுப்புரம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

Published On 2022-01-21 11:38 GMT   |   Update On 2022-01-21 11:38 GMT
விழுப்புரம் அருகே பிரசித்தி பெற்ற கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சி:

விழுப்புரம் அருகே உள்ள உலகலாம் பூண்டி கிராமத்தில் பெருமாள் கோவில் உள்ளது. கோவிலில் பெயிண்ட் அடித்து மராமத்து வேலைகள் செய்வதால் தகுந்த பாதுகாப்பு இன்றி இருந்து வந்தது.

இந்நிலையில் கோவில் வராண்டாவில் வைத்திருந்த உண்டியலை மர்மநபர்கள் இரவு நேரத்தில் உடைத்து உள்ளனர். பின்னர் அதில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியலை கோவில் பின்புறம் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா சரவணன் கொடுத்த புகாரின் பேரில் கெடார்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News