உள்ளூர் செய்திகள்
ரோட்டில் நடந்து சென்றவர் அரசு பஸ் மோதி பலி
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே ரோட்டில் நடந்து சென்றவர் அரசு பஸ் மோதி பலியானார்.
பாப்பிரெட்டிப்பட்டி:
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள சாமியாபுரம் கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் பத்மா (வயது 55). இவரது வீட்டுக்கு உறவினரான கிருஷ்ணகிரி லண்டன்பேட்டையை சேர்ந்த செல்வம் (44) என்பவர் வந்திருந்தார்.
இவர் நேற்று மாலை சாமியாபுரம் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் நடந்து சென்றதாக தெரிகிறது. அப்போது சேலத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற அரசு பஸ் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், அதே இடத்திலேயே பலியானார்.
இதுபற்றி தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் அங்கு சென்று செல்வம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.