உள்ளூர் செய்திகள்
கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் சாவு
ஆம்பூரில் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்.
ஆம்பூர்:
ஆம்பூர் ஜலம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஹபீபூர் ரஹ்மான். இவரது வீட்டில் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த சத்தார் வயது (44) என்பவர் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
ஏணி மூலம் பெயிண்டு அடித்துக் கொண்டிருந்த போது திடீரென தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.