உள்ளூர் செய்திகள்
திருச்சி விமான நிலைய இயக்குனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி:
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை அதிக வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள் என அனைவரும் ஒருபுறம் பாதிக்கப்பட்டு வந்த போதிலும் அரசு தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே மூன்றாவது தவணையாக முள்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கி, அதற்காக இன்று சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கலெக்டர் என தொற்று விட்டு வைக்காத நிலையில் திருச்சி விமான நிலைய இயக்குனருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் இயக்குனராக பணியாற்றி வருபவர் தர்மராஜ். இவர் கடந்த 8 மாத காலமாக விமான நிலைய இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் நேற்று அவருக்கு காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு இருந்து வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மருத்துவப்பரிசோதனை மேற்கொள்ள சொல்லி அறிவிப்பு வழங்கியுள்ளார்.