உள்ளூர் செய்திகள்
கொளத்தூரில் சத்யசேனா தலைவர் கார் கண்ணாடி உடைப்பு- ஒருவர் கைது
கொளத்தூரில் சத்யசேனா தலைவர் கார் கண்ணாடி உடைப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொளத்தூர்:
கொளத்தூர் ராஜமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் வசந்தகுமார். அகில இந்திய சத்ய சேனா தலைவராக உள்ளார். இவர் வீட்டு அருகே தனது காரை நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் வசந்த குமாரின் கார் கண்ணாடியை உடைத்து சென்று விட்டனர். இதுகுறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டைல்ஸ் கடை நடத்தி வரும் சுரேஷ் என்பவரை கைது செய்தனர். பிரியாணி கடை நடத்தி வரும் முஸ்தபா என்பவரை தேடி வருகின்றனர்.