உள்ளூர் செய்திகள்
அரிவாள் வெட்டு

பெரியபாளையம் அருகே பயணிகளை ஏற்றும் தகராறில் பஸ் டிரைவருக்கு அரிவாள் வெட்டு

Published On 2022-01-19 10:01 GMT   |   Update On 2022-01-19 10:01 GMT
பெரியபாளையம் அருகே பயணிகளை ஏற்றும் தகராறில் பஸ் டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியபாளையம்:

பெரியபாளையம் அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேம் குமார். இவர் ஊத்துக்கோட்டை-வரதபாளையம் வழித்தடத்தில் செல்லும் தனியார் பஸ்சில் டிரைவராக உள்ளார்.

ஊத்துக்கோட்டையில் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக அவருக்கும், மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

வீட்டின் அருகே அமர்ந்து இருந்த பிரேம்குமாரை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டார்கள்.

இதில் பலத்த காயம் பிரேம் குமார் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஆவடியைச் சேர்ந்தவர் ஆயிஷா. டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவரது தம்பி ரியாஸ் மாங்காட்டில் வசித்து வருகிறார். ரியாசுக்கு ஆயிஷா புதிதாக ஆட்டோ ஒன்று வாங்கி கொடுத்து இருந்தார். அதன் ஆர்.சி. புத்தகத்தை ஆயிஷா வைத்துக் கொண்டார். இதில் அக்காள்-தம்பி இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ரியாஸ் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆயிஷாவை வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த ஆயிஷா கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News