உள்ளூர் செய்திகள்
திண்டுக்கல் கலெக்டரிடம் மனு அளிக்க வந்த கிராம மக்கள்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு மனு

Published On 2022-01-19 08:16 GMT   |   Update On 2022-01-19 08:16 GMT
பழனியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பெரியகலையம்புத்தூரில் உள்ள ஐகோர்ட்டு பத்ரகாளியம்மன் கோவில் சார்பாக கோட்டை மைதானத்தில் தை மாதம் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு வருகிற பிப்ரவரி 9ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதில் சுமார் 500 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஜல்லிக்கட்டை பார்க்க வருவார்கள்.

எனவே 9ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தவும், அதற்கு தேவையான பாதுகாப்பு வழங்கவும் ஊர் பொதுமக்கள் சார்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
Tags:    

Similar News