உள்ளூர் செய்திகள்
அரிவாள் வெட்டு

மதுரையில் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு

Published On 2022-01-18 12:12 GMT   |   Update On 2022-01-18 12:12 GMT
மதுரையில் சொத்துப்பிரச்சினையில் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக அவரது சகோதரர் கைது செய்யப்பட்டார்.
மதுரை 


மதுரை திருமங்கலம் சீயோன் நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய ஜெயமுத்து (வயது28). இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். 

இவரது தாயார் வீடு முத்துப்பட்டி வீரம்உடையான் குறுக்கு தெருவில் உள்ளது. இந்த நிலையில் ஆரோக்கிய ஜெயமுத்து நேற்று முத்துப்பட்டிக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கும் சகோதரர்  ரோகர் அதிர்ஷ்டமுத்துவுக்கும் இடையே சொத்து விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதில் ஆத்திரமடைந்த சகோதரர் அரிவாளால் ஆரோக்கிய ஜெயமுத்துவை சரமாரியாக வெட்டினார். காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இதுதொடர்பாக ஆரோக்கிய ஜெயமுத்து சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோகர்அதிர்ஷ்டமுத்துவை கைது செய்தனர்.


Tags:    

Similar News