உள்ளூர் செய்திகள்
.

பாட்டியின் மாத்திரையை சாப்பிட்ட 5 வயது சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2022-01-18 10:15 GMT   |   Update On 2022-01-18 10:15 GMT
பாட்டியின் மாத்திரையை சாப்பிட்ட 5 வயது சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்
சேலம்:

சேலம் பழைய சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் லக்ஷிகா (வயது 5).

இந்த சிறுமி  பாட்டி சாப்பிடும் நீரழிவு நோய் மாத்திரைகளை விளையாட்டாக சாப்பிட்டு விட்டார். அதை தொடர்ந்து சிறுமி சோர்வாக காணப்பட்டார்.

இதையடுத்து சிறுமியை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News