உள்ளூர் செய்திகள்
உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.
அவினாசி:
அவினாசியை அடுத்து தெக்கலூர் மெயின்ரோட்டில் உள்ள டிரான்ஸ்பார்மர் நேற்று இரவு திடீர் என தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து அவினாசி தீயைனைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனையடுத்து மின்வாரிய ஊழியர்கள் சென்று மின்சாரத்தை நிறுத்தினர். உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டாதல் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.