உள்ளூர் செய்திகள்
கோவையில் தடையை மீறி இறைச்சி கடை திறந்தவருக்கு அபராதம்
6 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
வடவள்ளி:
வள்ளலார் தினத்தையொட்டி கோவையில் இன்று இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அதனையும் மீறி யாராவது கடையை திறந்து வைத்துள்ளார்களா? என்பதை கண்காணிக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மருதமலை ரோடு முல்லை நகர் செக்போஸ்ட் பகுதியில் தடையை மீறி இறைச்சி கடையை திறந்து இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக கோவை மாநகராட்சிக்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் வ.உ.சி. உயிரியல் பூங்கா இயக்குனர் செந்தில்நாதன் தலைமையில் மாநகராட்சி மேற்பார்வையாளர் ஸ்ரீராம் உள்ளிட்ட அதிகாரிகள் குறிப்பிட்ட அந்த கடைக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு இறைச்சி விற்கப்படுவது உறுதியானது. இதையடுத்து அங்கிருந்த 6 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளருக்கு ரூ.1000 அபராதம் விதித்தனர்..