உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை
மதுரை அருகே பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருமங்கலம்
மதுரை கூடக்கோவில் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட திருமால் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவர் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் கூடக்கோவில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் அந்த மாணவி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள அய்ய னார்புரத்தில் இருப்பது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று மாணவியை மீட்டனர். விசாரணையில் கிடைத்த தகவல் வருமாறு:&
மாணவி அடிக்கடி பாண்டி கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அய்யனார்புரத்தைச் சேர்ந்த மச்சக்காளை மகன் பூபதி (வயது22) வந்துள்ளார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் பூபதி ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திச்சென்றுள்ளார்.
மேலும் அவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் பூபதியை போலீசார் கைது செய்தனர்.