உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனைவி புகார்

Published On 2022-01-12 09:12 GMT   |   Update On 2022-01-12 09:12 GMT
சந்தியா அவினாசி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
அவினாசி:

அவினாசியை அடுத்துள்ள எஸ்.மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி சந்தியா ( வயது 29) . இவர் அவினாசி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரும் இவரது உறவினர்களும் நேற்று இரவு அவினாசி அனைத்து மகளிர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு புகார் கொடுத்தனர். 

அந்த புகாரில் கூறியிருப்பதாவது:

எனக்கும் கருமாபாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் (32) என்பவருக்கும் கடந்த 15.11.2021ம் ஆண்டு முறைப்படி திருமணம் நடந்தது. இந்த நிலையில் என்னை பிடிக்கவில்லை, என்னுடன் வாழப் பிடிக்கவில்லை என்று எனது கணவர் அவரது குடும்பத்தினரின் பேச்சை கேட்டு என்னை பெண் என்றும் பாராமல் உடலளவிலும், மனதளவிலும் பாதிப்பை உண்டாக்கி என்னுடன் வாழ மறுக்கிறார்கள்.

எனவே  எனது கணவர் மீதும், அவரது உறவினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளார். புகாரின்பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News