உள்ளூர் செய்திகள்
கள்ளக்காதலிக்கு மிரட்டல் விடுத்த சித்த மருத்துவர் கைது
தஞ்சையில் பணம், நகை தர மறுத்த கள்ளக்காதலிக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக சித்த மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி.காலனி காமராஜ் நகரை சேர்ந்தவர் செல்வபிரசாத் (வயது 31) சித்த மருத்துவர். இவர் அதே பகுதியில் சொந்தமாக கிளினிக் வைத்துள்ளார்.
இந்த நிலையில் இவரது கிளினிக்குக்கு கடந்த 2019-ம் ஆண்டு தஞ்சை யாகப்பா நகர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சங்கர் மனைவி ராதிகா என்பவர் சிகிச்சைக்காக வந்தார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை பயன்படுத்தி செல்வபிரசாத் அடிக்கடி ராதிகாவிடம் பணம் பெற்று வந்தார்.
இதற்கிடையே செல்வபிரசாத்துக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனால் எனக்கு பணம், நகை வேண்டும் என்று ராதிகாவிடம் கேட்டார். அதற்கு ராதிகா மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வபிரசாத் நாம் உல்லாசமாக இருந்த படம், வீடியோக்களை வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று ராதிகாவை மிரட்டினார்.
இது குறித்து ராதிகா தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வபிரசாத்தை கைது செய்தனர்.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி.காலனி காமராஜ் நகரை சேர்ந்தவர் செல்வபிரசாத் (வயது 31) சித்த மருத்துவர். இவர் அதே பகுதியில் சொந்தமாக கிளினிக் வைத்துள்ளார்.
இந்த நிலையில் இவரது கிளினிக்குக்கு கடந்த 2019-ம் ஆண்டு தஞ்சை யாகப்பா நகர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சங்கர் மனைவி ராதிகா என்பவர் சிகிச்சைக்காக வந்தார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை பயன்படுத்தி செல்வபிரசாத் அடிக்கடி ராதிகாவிடம் பணம் பெற்று வந்தார்.
இதற்கிடையே செல்வபிரசாத்துக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனால் எனக்கு பணம், நகை வேண்டும் என்று ராதிகாவிடம் கேட்டார். அதற்கு ராதிகா மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வபிரசாத் நாம் உல்லாசமாக இருந்த படம், வீடியோக்களை வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று ராதிகாவை மிரட்டினார்.
இது குறித்து ராதிகா தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வபிரசாத்தை கைது செய்தனர்.