உள்ளூர் செய்திகள்
30 தலைப்புகளில் பேசி 3 வயது சிறுவன் சாதனை
தஞ்சையில் 30 தலைப்புகளில் பேசி 3 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளான்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் மேலவஸ்தாசாவடியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவரது மனைவி காவேரிசெல்வி. இவர்களுக்கு 3 வயதில் ஸ்ரீசண்முகவேல் ஊர்தியார் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்த சிறுவன் இந்திய மாநிலத்தின் தலைநகரம், உலக நாட்டின் தலைநகரம், பொது அறிவு, திருக்குறள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் பேசி சாதனை படைத்துள்ளான்.
இதற்காக கலாம் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சாதனை சிறுவனை பெற்றோர் மற்றும் பலர் பாராட்டி வருகின்றனர்.