உள்ளூர் செய்திகள்
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

வங்கியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

Published On 2022-01-10 09:37 GMT   |   Update On 2022-01-10 09:37 GMT
சேலத்தில் வங்கியை முற்றுகையிட்டு பொதுமக்கள் பேராட்டம் நடத்தினர்.
மகுடஞ்சாவடி:

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ள கன்னந்தேரியில் இந்தியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இக்கிளையை வருகிற 25&ந்தேதி முதல் 4 கிலோ மீட்டருக்கு தொலைவிலுள்ள கொங்கணாபுரம் கிளையுடன் இணைக்கப் போவதாக வங்கி நிர்வாகம் அறிவித்ததாக தெரிகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 300 -க்கும் மேற்பட்டோர் வங்கி முன்பு இன்று காலை திரண்டு  முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இப்போராட்டம் குறித்து பொதுமக்கள் கூறுகையில்  வங்கியை இங்கிருந்து இடமாற்றம் செய்ய அனுமதிக்க மாட்டோம். அதையும் மீறி இடமாற்றம் செய்தால்  வங்கி முன்பு ஆயிரக்கணக்கில் திரண்டு சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றனர்.  அதன் பிறகு கன்னந்தேரி ஊராட்சி மன்ற தலைவர் ராஜாமணி தலைமையில் வங்கி மேலாளர் விஜயராகவனிடம் மனு கொடுத்தனர்.
Tags:    

Similar News