உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தூத்துக்குடியில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Published On 2022-01-01 10:59 GMT   |   Update On 2022-01-01 10:59 GMT
தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை மற்றும் மணல் திருட்டு வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தூத்துக்குடி:

ஆத்தூர் அருகே புன்னக்காயல் பகுதியை சேர்ந்த ஜேசுராஜ் (வயது 38) என்பவர் கடந்த 4-ந்தேதி கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டார். 

இதே போல ஸ்ரீவைகுண்டம் அருகே குலசேகரநத்தம் பகுதியைச் சேர்ந்த பச்சைபெருமாள் (29) என்பவரையும் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (29) என்பவர் கடந்த 10-ந்தேதி மணல் திருட்டு வழக்கில் போலீசார் கைது செய்தனர். கைதான ஜேசுராஜ், பச்சை பெருமாள், ரமேஷ் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க இன்ஸ்பெக்டர்கள் நடவடிக்கை எடுத்தனர். 

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அளித்த பரிந்துரையை ஏற்று 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 3 பேரும் பாளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News