உள்ளூர் செய்திகள்
மரணம்

ஆண்டிபட்டி அருகே பால் வியாபாரி மர்ம மரணம்

Published On 2021-12-29 09:24 GMT   |   Update On 2021-12-29 09:24 GMT
ஆண்டிபட்டி அருகே பால் வியாபாரி மர்மமான முறையில் இறந்தது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஜக்கம்பட்டியைச் சேர்ந்த மாடசாமி மகன் பாலமுருகன் (வயது 31). இவருடைய மனைவி கோமதி (23). இவர்கள் இருவரும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள தனியார் பால்பண்ணையில் வேலை பார்த்து குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பால்பண்ணைக்கு செல்வதாக பாலமுருகன் கூறிவிட்டு சென்றார். பின்னர் அவரது மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு உடம்பு வலி அதிகமாக இருப்பதாக கூறியுள்ளார். பின்னர் டி.வாடிபட்டி கிராமத்தில் உள்ள தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவலறிந்ததும் ஆண்டிபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மனைவி கோமதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News