உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-12-28 09:55 GMT   |   Update On 2021-12-28 09:55 GMT
நல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காங்கேயம்:

காங்கேயம் அடுத்துள்ள  நல்லூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட செட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலைவாணி (வயது 24). இவர் ஆன்லைன் மார்க்கெட்டிங்கில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்ததாக தெரிகிறது. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் இன்று அதிகாலையில் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த நல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News