உள்ளூர் செய்திகள்
தாராபுரத்தில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் விளக்கு பூஜை
விழாவில் 200- க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சமயபுரம் சக்தி மாரியம்மன் முன்பு குத்துவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.
தாராபுரம்:
தாராபுரத்தில் விசுவ இந்து பரிஷத் கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில்விளக்கு பூஜை சிரஞ்சனிமகாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விசுவ இந்து பர்ஷத் நிறுவனர் வேதாந்தம் தலைமை தாங்கினார்.
கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51வது சக்தி பீடம் ஞானகுரு ஸ்ரீ சிவலிங்கேசுவர சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாநில பொதுச் செயலாளர் சோமசுந்தரம், இணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார், மாவட்ட செயல் தலைவர் சிவானந்தம், திருப்பூர் கோட்ட அமைப்பாளர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் 200- க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சமயபுரம் சக்தி மாரியம்மன் முன்பு குத்துவிளக்கு ஏற்றி வழிபட்டனர். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை திருப்பூர் தெற்கு மாவட்ட அமைப்பாளர் குருதிருமலைசாமி, தாராபுரம் ஒன்றிய அமைப்பாளர் அம்பிகாபதி, இணை அமைப்பாளர் நாச்சிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் கிராம கோவில் பூசாரிகள் பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர்.