உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

ரெயில் மோதி அடையாளம் தெரியாத வாலிபர் பலி

Published On 2021-12-25 08:54 GMT   |   Update On 2021-12-25 08:54 GMT
ரெயில் மோதி அடையாளம் தெரியாத வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை மதுக்கரை - போத்தனூர் ரெயில்வே தண்டவாளம் குரும்பபாளையம் அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக போத்தனூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் சபரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்த வாலிபரின் உடலை சோதனை செய்தனர். அப்போது அவரது வலது மார்பில் பச்சை குத்தப்பட்டு இருந்தது. பின்னர் வாலிபரின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் ரெயில் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News