உள்ளூர் செய்திகள்
கைது

மதுரையில் வீடு எடுத்து விபசாரம் நடத்திய புரோக்கர்கள் கைது

Published On 2021-12-17 09:56 GMT   |   Update On 2021-12-17 09:56 GMT
மதுரையில் வீடு எடுத்து விபசாரம் நடத்திய 2 புரோக்கர்களை கைது செய்த போலீசார் தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.
மதுரை:

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் விபசாரம் நடப்பதாக மாநகர போலீசுக்கு தகவல் வந்தது. இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாநகர வடக்கு போலீஸ் துணை கமி‌ஷனர் ராஜசேகர் உத்தரவிட்டார்.

அதன்படி அண்ணாநகர் போலீஸ் உதவி கமி‌ஷனர் சூரக்குமரன் மேற்பார்வையில், புதூர் இன்ஸ்பெக்டர் துரை பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மாட்டுத்தாவணி பத்திரிகையாளர் குடியிருப்பு பகுதியில் விபசாரம் நடப்பதாக தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர்.

அங்கு பதுங்கியிருந்த 3 பெண்கள் உள்பட 5 பேர் பிடிபட்டனர். விசாரணையில் அவர்கள் திருவனந்தபுரம் சாலமன் (30), சென்னை நம்மாழ்வார் பேட்டை ஹரிகிருஷ்ணன் (26) என்பது தெரியவந்தது.

மதுரையைச் சேர்ந்த புகழ்வேந்தன் என்பவர் மாட்டுத்தாவணியில் வீடு எடுத்து சென்னை, கோவை, ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து 3 பெண்களை வரவழைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார். அவருக்கு சாலமன், ஹரி கிருஷ்ணன் ஆகிய 2 பேரும் புரோக்கர்களாக இருந்து செயல்பட்டது தெரிந்தது.

இதையடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட சாலமன், ஹரி கிருஷ்ணன் ஆகியோரை கீரைத்துறை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய புகழ்வேந்தனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News