உள்ளூர் செய்திகள்
விபத்து

நாட்டறம்பள்ளி அருகே பைக் மோதி தொழிலாளி மரணம்

Published On 2021-12-15 09:59 GMT   |   Update On 2021-12-15 09:59 GMT
நாட்டறம்பள்ளி அருகே பைக் மோதிய விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் குப்பன். இவரது மகன் வெங்கடேசன் (வயது 44) இவர் கூலி வேலை செய்து வந்தார்.

இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். சம்பவத்தன்று வெங்கடேசன் கடைக்கு சென்று வருவதாக கூறி தனது வீட்டில் இருந்து பைக்கில் நாட்டறம்பள்ளி நோக்கி சென்றுக்கொண்டு இருந்தார். அப்போது வாணியம்பாடி பகுதியில் இருந்து நாட்டறம்பள்ளி நோக்கி சென்ற பைக் வெங்கடேசன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் வெங்கடேசன் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த வெங்கடேசனை பொதுமக்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று காலை வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News