உள்ளூர் செய்திகள்
குலசேகரம் அருகே சகோதரிக்கு தகவல் தெரிவித்து விட்டு தற்கொலை செய்த வாலிபர்
குலசேகரம் அருகே பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபர் சகோதரிக்கு தகவல் தெரிவித்து விட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவட்டார்:
குலசேகரம் அருகே உள்ள செறுதி கோணம் பகுதியை சேர்ந்தவர் பாலஸ். இவரது மகன் ஸ்டாலின் (வயது 21). இவர் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அவரின் பெற்றோர் அவரின் நண்பர்களை அழைத்து கண்டித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் ஸ்டாலினிடம் புகார் செய்தனர். இதனால் கடந்த 2 நாட்களாக பெற்றோரிடம் இது குறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் அவரின் சகோதரிக்கு போன் செய்து தற்கொலை செய்யப்போவதாக கூறியுள்ளார். பின்னர் அவரின் சகோதரி செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது.
சம்பவத்தன்று ஆலம்பாறை பகுதியில் இன்று விஷம் குடித்த நிலையில் ஸ்டாலின் கிடந்தார். அந்த வழியாக சென்ற பால் வெட்டும் தொழிலாளிகள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குலசேகரம் அருகே உள்ள செறுதி கோணம் பகுதியை சேர்ந்தவர் பாலஸ். இவரது மகன் ஸ்டாலின் (வயது 21). இவர் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அவரின் பெற்றோர் அவரின் நண்பர்களை அழைத்து கண்டித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் ஸ்டாலினிடம் புகார் செய்தனர். இதனால் கடந்த 2 நாட்களாக பெற்றோரிடம் இது குறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் அவரின் சகோதரிக்கு போன் செய்து தற்கொலை செய்யப்போவதாக கூறியுள்ளார். பின்னர் அவரின் சகோதரி செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது.
சம்பவத்தன்று ஆலம்பாறை பகுதியில் இன்று விஷம் குடித்த நிலையில் ஸ்டாலின் கிடந்தார். அந்த வழியாக சென்ற பால் வெட்டும் தொழிலாளிகள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.