உள்ளூர் செய்திகள்
அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அதற்குள் விழும் அபாயம் உள்ளது.
பல்லடம்:
பல்லடத்தில் 24 மணி நேரமும் பரபரப்பாக உள்ள என்.ஜி.ஆர்.ரோட்டில் இருந்து சர்ச்சுக்கு செல்லும் வழியில் உள்ள கழிவுநீர் கால்வாயின் மேல் காரை பெயர்ந்து குழி ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அதற்குள் விழும் அபாயம் உள்ளது. எனவே இந்த அபாய குழியை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.