உள்ளூர் செய்திகள்
திருட்டு

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2021-12-08 18:13 GMT   |   Update On 2021-12-08 18:13 GMT
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த நுங்கம்பாக்கம் கம்மவார்பாளையம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் சரவணன் (வயது 25). இவர் மேவலுர்குப்பம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 4-ந்தேதி அவர் திருவள்ளூரை அடுத்த அத்திகுளம் பஸ் நிறுத்தம் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். இரவு வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிள் திருட்டுபோனது தெரியவந்தது. பல இடங்களில் தேடியும் மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை. இது குறித்து சரவணன் மணவாள நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News