உள்ளூர் செய்திகள்
சாலையில் கிடந்த தங்கசெயினை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்
திருப்பூரில் இருந்து சென்னை செல்வதற்காக ரெயில் நிலையத்திற்கு செல்லும் போது குழந்தையின் கழுத்தில் கிடந்த செயின் தவறி விழுந்துள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் ரெயில் நிலைய நுழைவுவாயில் பகுதியில் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலாவதி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சாலையில் ஒரு பவுன் தங்க செயின் கிடந்தது. அதனை மீட்ட போலீசார் அது யாருடையது என்று விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது அங்கு 2 குழந்தைகளுடன் ஒரு குடும்பத்தினர் தங்க செயினை தேடி வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது கீழே கிடந்தது குழந்தை ஒருவரின் கழுத்தில் அணிந்திருந்த செயின் என்பது தெரியவந்தது.
திருப்பூரில் இருந்து சென்னை செல்வதற்காக ரெயில் நிலையத்திற்கு செல்லும் போது குழந்தையின் கழுத்தில் கிடந்த செயின் தவறி விழுந்துள்ளது. இதையடுத்து அந்த செயினை போலீசார் உரியவர்களிடம் ஒப்படைத்தனர். தங்கசெயினை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர் போலீசாருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.