உள்ளூர் செய்திகள்
மதுரை அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
மதுரை அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சம்மட்டிபுரம் மெயின் ரோட்டில் கஞ்சா விற்று கொண்டிருந்த ஜெயபிரகாஷ் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதுபோல், தல்லாகுளம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, நரிமேடு பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த சூர்யா (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.