உள்ளூர் செய்திகள்
மரணம்

கரூர் பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்தவர் பலி

Published On 2021-12-04 08:51 GMT   |   Update On 2021-12-04 08:51 GMT
கரூர் பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

கரூர் பஸ்நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து, சக பயணிகள் அவரை மீட்டு கரூர் காந்தி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சுகுணா கொடுத்த புகாரின் பேரில் கரூர் டவுன் சப்- இன்ஸ்பெக்டர் கஸ்தூரி வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News