உள்ளூர் செய்திகள்
வெள்ளகோவிலில் சூரியகாந்தி விதை ஏலம் நிறுத்தம்
மீண்டும், பிப்ரவரி மாதத்தில் சீசன் துவங்கி சூரியகாந்தி விதை வரத்து அதிகரிக்கும் போது ஏலம் நடைபெறும்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் வேளாண்மை கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமையன்று சூரியகாந்தி விதை ஏலம் நடந்து வந்தது. தற்போது சீசன் முடிந்ததாலும், வரத்து குறைந்ததாலும் சூரியகாந்தி ஏலம் கடந்த 2 வாரமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஏல அதிகாரி கூறுகையில், தற்போது வரத்து சரிந்ததால் ஏலம் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும், பிப்ரவரி மாதத்தில் சீசன் துவங்கி சூரியகாந்தி விதை வரத்து அதிகரிக்கும் போது ஏலம் நடைபெறும் என்றனர்.