செய்திகள்
உடுமலை அரசு கலை கல்லூரி.

உடுமலை அரசு கலை கல்லூரியில் மாணவர் பேரவை தேர்தல்

Published On 2021-11-30 07:17 GMT   |   Update On 2021-11-30 07:17 GMT
தேர்தலில் வென்றவர்களை கல்லூரி முதல்வர் கல்யாணி, துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
உடுமலை:

உடுமலை அரசு கலை கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல் நடந்தது. கல்லூரி கணிதவியல் துறைத்தலைவர் பொன்முடி முன்னிலை வகித்தார். பேரவைத்தேர்தலில், அதிகப்படியான மாணவ, மாணவிகள் போட்டியிட்டனர்.

இளநிலை 2-வது  மற்றும் 3-வது  ஆண்டு மாணவ, மாணவிகள் ஓட்டளித்தனர். அவ்வகையில் பேரவைத்தலைவராக பி.காம்., 3-ம்ஆண்டு மாணவர் ஆனந்தன், துணைத்தலைவராக, பி.ஏ., 3-ம் ஆண்டு மாணவர் எபிநேசர், செயலராக பி.எஸ்.சி., 2-ம் ஆண்டு மாணவர் கவுதம், மகளிர் செயலராக பி.எஸ்.சி., 2-ம் ஆண்டு மாணவி சவிதாசூரணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்தலில் வென்றவர்களை கல்லூரி முதல்வர் கல்யாணி, துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
Tags:    

Similar News