செய்திகள்
குடிநீர் இணைப்பு கேட்டு 2 குழந்தைகளுடன் பெண் மனு
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது உரிய காரணங்கள் இன்றி அலைய வைக்கிறார்கள்.
திருப்பூர்:
திருப்பூர் வஞ்சிபாளையம்ஸ்ரீவாரி கார்டன் பகுதியை சேர்ந்தவர் குமரேசன்.இவரது மனைவி சாந்தி. இவர் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தனது 2 பெண் குழந்தைகளுடன் வந்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் மேற்கண்ட முகவரியில் இரண்டு பெண் குழந்தைகளுடன் கடந்த 8 மாதமாக குடியிருந்து வருகிறேன். வீட்டிற்கு குடிநீர் இணைப்பு கேட்டு புதுப்பாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தில் 5 முறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது உரிய காரணங்கள் இன்றி அலைய வைக்கிறார்கள். குடிநீர் கிடைக்காமல் இரண்டு குழந்தைகளுடன் தவித்து வருகிறோம். எனவே இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.