செய்திகள்
தற்கொலை

தக்கலையில் சலவை தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-11-26 10:29 GMT   |   Update On 2021-11-26 10:29 GMT
தக்கலையில் நண்பர் அறையில் சலவை தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தக்கலை:

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்தவர் அழகேந்திரன் (வயது 43). சலவைத்தொழிலாளி.

இவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு தக்கலைக்கு வந்தார். அங்குள்ள கோனார் தெருவில் குடும்பத்தோடு வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக அழகேந்திரனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்காக அதிக பணம் செலவாகியது.

இதனால் அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் கூறி கவலைப்பட்டு உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மாலை வரை வீட்டிற்கு வரவில்லை.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் அழகேந்திரனை தேடினார்கள். அவர் தக்கலை பேலஸ் ரோட்டில் உள்ள அழகேந்திரனின் நண்பனிடம் சென்று விசாரிக்க சென்றனர். அப்போது அறையின் கதவு பூட்டப்பட்டிருந்தது.

இதையடுத்து ஜன்னல் வழியாக பார்த்தபோது அங்கு அழகேந்திரன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து தக்கலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது மகன் அஜய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News