செய்திகள்
நூலக வசதியுடன் பா.ஜ.க., புதிய கட்டிடம்
திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
திருப்பூர்:
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. அலுவலகம் 3 மாடியில் கட்டப்பட்டுள்ளது. இங்கு 500 பேர் அமரக்கூடிய வகையில் கூட்ட அரங்கு மற்றும் சிறிய அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் நூலக வசதியும் செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி முக்கிய பிரமுகர்கள் தங்குவ தற்காக 2 அறைகள் உள்ளது. நிர்வாகிகள் அமர்ந்திருக்க அறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. கட்டிட வளாகத்தை சுற்றிலும் நாட்டு மரக்கன்றுகளை ஜே.பி.நட்டா மற்றும் நிர்வாகிகள் நட்டனர்.