செய்திகள்
ஏரியில் மூழ்கி பலியான முத்துகிருஷ்ணன்.

விழுப்புரம் அருகே ஏரியில் மூழ்கி டிரைவர் உள்பட 2 பேர் பலி

Published On 2021-11-17 08:33 GMT   |   Update On 2021-11-17 08:33 GMT
விழுப்புரம் அருகே ஏரியில் மூழ்கி டிரைவர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் அருகே மயிலம் போலீஸ் சரகம் பெரியதச்சூர் ஆலகிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். டிராக்டர் டிரைவர்.

இவர் இயற்கை உபாதை கழிக்க ஏரிக்கு சென்று விட்டு திரும்பி ஏரிகளிங்காலில் கால் கழுவும் போது தவறி ஏரியில் விழுந்து இறந்து விட்டார். வெளியே சென்ற வரை காணவில்லை என அவர் மனைவி மற்றும் உறவினர்கள் தேடி சென்று பார்த்தனர். அப்போது ஏறியில் தவறிவிழுந்ததில் முத்துகிரு‌ஷண்ன் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து பெரியதச்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் அவர் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருவெண்ணைநல்லூர் அருகே ஏமப்பூரை சேர்ந்தவர் பாஸ்கர் (34). கூலித் தொழிலாளி. அவர் நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்றார். அதன்பின்னர் அங்குள்ள ஏரியில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் உடலை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News